பதிவு செய்த நாள்
27 செப்2018
06:09
புதுடில்லி : புதிய தொலைதொடர்பு கொள்கைக்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
என்.டி.சி.பி., எனப்படும், தேசிய மின்னணு தொலைதொடர்பு கொள்கை, 2022க்குள், 10 ஆயிரம் கோடி டாலர் முதலீட்டை ஈர்த்து, 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், அதிவேக பிராட்பேண்டு இணைப்புகளை ஏற்படுத்தி, கண்ணாடி நாரிழை கேபிள்கள் வாயிலாகவும், ‘5ஜி’ போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலமாகவும், நியாயமான விலையில், தொலைதொடர்பு சேவை கிடைக்க, புதிய கொள்கை வழி வகை செய்யும்.
அகண்ட அலைவரிசை உரிமம் உள்ளிட்டவற்றுக்கு அதிக தொகை நிர்ணயம் காரணமாக, தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள், 7.80 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நிலையான தொகைக்கு, அகண்ட அலைவரிசை ஒதுக்கீடு செய்யவும், அச்சேவையை, வினாடிக்கு, 50 மெகாபிட் வேகத்தில் வழங்கவும், புதிய தேசிய மின்னணு தொலைதொடர்பு கொள்கையில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.‘‘புதிய தொலை
தொடர்பு கொள்கையால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தொலைதொடர்பு துறையின் பங்கு, 6 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக உயரும்,’’ என, மத்திய தொலைதொடர்பு அமைச்சர், மனோஜ் சின்ஹா தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|