சர்க்கரை துறைக்கு ரூ.5,500 கோடி ஊக்க சலுகை; கரும்பு விவசாயிகள் ஆதரவு தொகை இரு மடங்கு உயர்வுசர்க்கரை துறைக்கு ரூ.5,500 கோடி ஊக்க சலுகை; கரும்பு விவசாயிகள் ஆதரவு தொகை இரு ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2018
10:57

மும்பை : சந்தை முதலீட்டாளர்கள் தங்களின் கணக்குகளை புதுப்பித்து கொண்டதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (செப்.,27) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. அமெரிக்க பெடரல் வங்கி இந்த ஆண்டில் 3 வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியதன் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன.

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வரலாறு காணாத ரூபாய் மதிப்பு சரிவால் ஆகியவற்றால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருந்த முதலீட்டாளர்கள், மத்திய அரசு நேற்று 19 இறக்குமதி பொருட்களின் மீதான சுங்கவரியை உயர்த்தி இருப்பதால் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 56.18 புள்ளிகள் உயர்ந்து 36,598.45 புள்ளிகளாகவும், நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து 11,071.80 ஆகவும் உள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்கஸ், இன்போசிஸ், விப்ரோ, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ,டிசிஎஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.91 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதே சமயம் எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, வேதாந்தா குழுமம், பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஐடிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 0.61 சதவீதம் சரிவடைந்துள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளை பொறுத்த வரை ஷாங்காய், ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. அமெரிக்க பங்குச்சந்தைகளும் சரிவுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)