பதிவு செய்த நாள்
27 செப்2018
10:57
மும்பை : சந்தை முதலீட்டாளர்கள் தங்களின் கணக்குகளை புதுப்பித்து கொண்டதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (செப்.,27) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. அமெரிக்க பெடரல் வங்கி இந்த ஆண்டில் 3 வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியதன் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன.
கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வரலாறு காணாத ரூபாய் மதிப்பு சரிவால் ஆகியவற்றால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருந்த முதலீட்டாளர்கள், மத்திய அரசு நேற்று 19 இறக்குமதி பொருட்களின் மீதான சுங்கவரியை உயர்த்தி இருப்பதால் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 56.18 புள்ளிகள் உயர்ந்து 36,598.45 புள்ளிகளாகவும், நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து 11,071.80 ஆகவும் உள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்கஸ், இன்போசிஸ், விப்ரோ, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ,டிசிஎஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.91 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதே சமயம் எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, வேதாந்தா குழுமம், பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஐடிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 0.61 சதவீதம் சரிவடைந்துள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளை பொறுத்த வரை ஷாங்காய், ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. அமெரிக்க பங்குச்சந்தைகளும் சரிவுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|