பதிவு செய்த நாள்
28 செப்2018
00:50
கோல்கட்டா : ‘‘இலங்கை உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் போட்டியை சமாளிக்கும் வகையில், இந்திய தேயிலையின் தரம் உயர்த்தப்பட வேண்டும்,’’ என, மத்திய வர்த்தக துறை செயலர், அனுப் வாத்வான் வலியுறுத்தியுள்ளார்.
அவர், கோல்கட்டாவில், இந்திய தேயிலை கூட்டமைப்பின், ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் மேலும் பேசியதாவது: நாட்டின், தேயிலை உற்பத்தி குறைந்து வருகிறது. இதற்கு, தேயிலை உற்பத்தி சார்ந்த சவால்கள் தான் காரணம். தேயிலை தோட்டங்கள், தேயிலை உற்பத்திக்கு உதவாத சூழலுக்கு மாறி வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். தேயிலை துறை, தேயிலை உற்பத்தியில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றி, தனித்துவத்துடன் திகழ்வது அவசியம்.
அதன் மூலம், தேயிலை உற்பத்தியை அதிகரித்து, இலங்கை போன்ற சர்வதேச நாடுகளுடன் போட்டி போட முடியும். இந்திய தேயிலைக்கு, ‘பிராண்டு’ மதிப்பை உருவாக்கி, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக சந்தைப்படுத்த, தேயிலை துறையினர் முயற்சிக்க வேண்டும். இது தொடர்பாக, தேயிலை துறை எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், மத்திய அரசு ஆதரவளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|