பதிவு செய்த நாள்
28 செப்2018
00:51
மும்பை : மத்திய அரசு, நேற்று முன்தினம், ‘ஏசி, வாஷிங் மிஷின்’ உள்ளிட்ட, 19 பொருட்களின் இறக்குமதி வரியை உயர்த்தியது. இதன் எதிரொலியாக, நேற்று காலையில் பங்கு வர்த்தகம் சற்று ஏற்றம் கண்டது. எனினும், முன்பேர வர்த்தகத்தின் கணக்கு முடிப்பிற்கான இறுதி நாள் என்பதால், முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தனர்.இதனால், பங்குச் சந்தைகள் சரிவை கண்டன. மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, 218.10 புள்ளிகள் குறைந்து, 36,324.17 புள்ளிகளில் நிலை கொண்டது.
தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 11 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழாக சரிவடைந்தது. வர்த்தகத்தின் இறுதியில், நிப்டி, 76.25 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 10,977.55 புள்ளிகளில் நிலை பெற்றது. தொடர்ந்து இரண்டு நாட்களாக, பங்குச் சந்தைகள் சரிவை கண்டு வருகின்றன. நேற்று முன்தினம், அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தியது. இந்தாண்டில், மூன்றாவது முறையாக மேற்கொண்ட வட்டி உயர்வின் தாக்கம், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவில் எதிரொலித்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|