பதிவு செய்த நாள்
30 செப்2018
00:55
புதுடில்லி: வீட்டு சமையலறை சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், ‘ஸ்டவ் கிராப்ட்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. இது தொடர்பான ஆவணங்களை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் அளித்துள்ளது. இப்பங்கு வெளியீட்டில் திரட்டப்படும், 145 கோடி ரூபாய், பழைய கடன்களை திரும்பத் தருவதற்கும், வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘எடல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ், ஐ.டி.எப்.சி., பேங்க், ஜே.எம்.பைனான்சியல்’ ஆகிய நிறுவனங்கள், பங்கு வெளியீட்டை நிர்வகிக்கின்றன.பங்கு வெளியீட்டு தேதி, ‘செபி’ அனுமதிக்கு பின், அறிவிக்கப்படும்.ஸ்டவ் கிராப்ட் நிறுவனம், ‘பிஜியான், கில்மா’ ஆகிய பிராண்டுகளில், பிரஷர் குக்கர் உள்ளிட்ட சமையலறை சாதனங்களை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகிறது.இதன் நிறுவனர்களான, ராஜேந்திர காந்தி, சுனிதா ராஜேந்திர காந்தி ஆகியோருடன், செக்யுயா கேப்பிடல் இந்தியா குரோத் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனமும், குறிப்பிடத்தக்க பங்குகளை விற்பனை செய்யும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|