பதிவு செய்த நாள்
01 அக்2018
03:58
இந்திய மியூச்சுவல் பண்ட் துறை பத்தாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு, 12.5 சதவீத வளர்ச்சி பெற்று சர்வதேச அளவை விட அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்திய மியூச்சுவல் பண்ட்கள் சங்கம் அமைப்பு மற்றும் கிரிசில் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. பங்குச்சந்தைக்கு வரும் நிதியில் மியூச்சுவல் பண்ட் மூலமான முதலீடு, 2014ம் ஆண்டில், 8.5 சதவீதமாக இருந்ததில் இருந்து தற்போது, 18.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்தியாவில் மொத்த நிதி சேமிப்பு மற்றும் முதலீட்டில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டின் பங்கு, 3 ஆண்டுகளில், 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சீரான முதலீட்டிற்கு வழி வகுக்கும், எஸ்.ஐ.பி கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ள தனிநபர் முதலீட்டாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|