பதிவு செய்த நாள்
01 அக்2018
03:59
பங்குச்சந்தை அண்மையில் பெரும் சரிவுக்கு உள்ளானது. ஒரே நாளில் சென்செக்ஸ், 1,000 புள்ளிகளுக்கு மேல் இழந்து பின் மீண்டது. சந்தை இவ்வாறு ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகும் போது, முதலீட்டாளர்களுக்கு கவலை ஏற்படுவது இயற்கையானது. பொதுவாக ஏற்ற இறக்கமான சந்தையில் தவிர்க்க வேண்டிய செயல்கள் இவை:
பீதியால் விற்பனைபங்குச்சந்தை ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகும் போது, முதலில் தவிர்க்க வேண்டிய விஷயம் அச்சத்தின் காரணமாக முடிவு எடுப்பது தான். சந்தை போக்கு தரும் அச்சத்தால், உணர்ச்சிமயமான முடிவு எடுக்கக் கூடாது. முக்கியமாக பங்குகளை விற்று விட்டு வெளியேற துடிக்க கூடாது. அடிப்படை அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்.
எஸ்.ஐ.பி.,யை தொடரவும்மியூச்சுவல் பண்ட் திட்டங்களில், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்துள்ளவர்கள், அந்த முதலீட்டை இந்த கட்டத்தில் நிறுத்திவிடக்கூடாது. எஸ்.ஐ.பி., முதலீட்டை நிறுத்துவதன் மூலம், சம பங்குகளின் மறுமுதலீடு பலனை இழக்க வேண்டி வரலாம். சரிவு காலத்தில் குறைந்த விலையில், அதிக யூனிட்களை வாங்க முடியும்.
குறைந்த விலை பங்குகள்சந்தை சரிவுக்கு உள்ளாகும் போது, நல்ல பங்குகள் குறைந்த விலையில் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், குறைந்த விலை பங்குகளை எல்லாம், கண்ணை மூடிக்கொண்டு வாங்குவதை தவிர்க்க வேண்டும். அடிப்படை அம்சங்களை கொண்டே ஒரு பங்கு மதிப்பு மிக்கதா... என, தீர்மானிக்க வேண்டும்.ஒரே துறை பங்குகள்சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகள், குறைந்த விலையில் கவர்ந்திழுக்கலாம். ஆனால், ஒரே துறையை சார்ந்த பங்குகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். பரவலாக்கம் தான் சரியான உத்தி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், மிகை பரவலாக்கமும் நல்லது அல்ல.
கடனில் பங்குகள்எப்போதுமே கடன் வாங்கி முதலீடு செய்வது நல்ல உத்தி அல்ல. பங்குகள் சரிந்து, குறைவான விலையில் பரிவர்த்தனை செய்யப்படுவது, நல்ல வாய்ப்பாக தோன்றலாம். ஆனால், கடன் வாங்கி குறைந்த விலை பங்குகளை வாங்கி குவிப்பது தவிர்க்க வேண்டிய செயலாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|