பதிவு செய்த நாள்
01 அக்2018
03:59
இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில், குடும்ப வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான ஆர்வம் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. பி.டபிள்யு.சி., நிறுவனம் நடத்திய குடும்ப தொழிலை, அடுத்த தலைமுறை மேற்கொண்டு நடத்துவது தொடர்பான ஆய்வில், 50 சதவீதத்தினர் குடும்ப வர்த்தகத்தை தொடர்வதில் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.குடும்ப வளத்தை காப்பாற்றி வளர்த்தெடுப்பதில் ஆர்வம் இருப்பதோடு, தொழில்முனைவில் அதிகரிக்கும் ஆர்வமும் இந்த போக்கிற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.ஆனால், மூத்த தலைமுறை வர்த்தகர்கள் மத்தியில் வேறு விதமான மனப்போக்கு நிலவுவதும் தெரியவந்துள்ளது. தற்போதைய வர்த்தக தலைவர்களில், 35 சதவீதத்தினர் மட்டுமே தொழில் நிர்வாகத்தை குடும்ப வாரிசிடம் ஒப்படைக்க விரும்புகின்றனர். 48 சதவீதத்தினர், வர்த்தக உரிமையை மட்டும் குடும்ப வாரிசிடம் ஒப்படைக்க விரும்புகின்றனர்.பெரும்பாலான வர்த்தக தலைவர்கள், தொழில்முறை நிர்வாகிகளை வர்த்தகத்தில் கொண்டு வர விரும்புகின்றனர். பொதுவாக இந்தியா குடும்ப வர்த்தகத்திற்காக அறியப்படும் நாடாக இருக்கிறது. பெரும்பாலும் அடுத்த தலைமுறையினர் குடும்ப வர்த்தகத்தை தொடர்ந்து நடத்தினாலும், இது பெரும் சவாலாக அமைகிறது.இந்தியாவில், 12 சதவீத குடும்ப வர்த்தகங்களே மூன்றாம் தலைமுறை வரை தழைப்பதாக கருதப்படுகிறது. வெறும், 3 சதவீத குடும்ப வர்த்தகங்களே நான்காவது தலைமுறைக்கு செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குடும்ப வர்த்தகங்கள் நிர்வாக தொடர்ச்சி மற்றும் சர்வதேச அளவிலான போட்டி ஆகிய இரட்டை சவால்களை எதிர்கொள்ளும் நிலை இருப்பதாக கருதப்படுகிறது.இந்த பின்னணியில் இளம் தலை முறையினர் குடும்ப வர்த்தகத்தை தொடர்வதில் ஆர்வம் காட்டுவது முக்கியமாக அமைகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|