பதிவு செய்த நாள்
02 அக்2018
01:05
இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடான, ‘ஜிம் – 2’வில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது.
தமிழக அரசு, சென்னையில், வரும் ஜன., 23, 24ல், ஜிம் – 2வை நடத்த உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தொழில் துறை அதிகாரிகள், பல்வேறு நாடுகளுக்கும் சென்று, முதலீட்டாளர்களை சந்தித்து, அழைப்பு விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம், தமிழகத்தில், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதிக முதலீடுகளை ஈர்க்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.சமீபத்தில், தமிழக அமைச்சர், அதிகாரிகள், சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று திரும்பினர்.
சிங்கப்பூர் சென்று திரும்பி வருவதற்குள், அந்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம், 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முன் வந்துள்ளது.இந்நிறுவனம், டெல்டா மாவட்டத்தில், உணவு பதப்படுத்துதல், வேளாண் சார்ந்த தொழில் மற்றும் துறைமுக மேம்பாடு நிறுவனம் ஆகியவற்றை துவங்க விருப்பம் தெரிவித்து, ‘இ – மெயில்’ அனுப்பி உள்ளது.இது, தமிழகத்தின் மீது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நல்ல நம்பிக்கை வைத்துள்ளதை காட்டுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|