பதிவு செய்த நாள்
02 அக்2018
01:07
புதுடில்லி:கடந்த செப்டம்பரில், தயாரிப்பு துறை, சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறை குறித்து, ‘நிக்கி – மார்க்கிட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்டை விட, செப்டம்பரில், 1.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால், இவ்வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.எம்., – பி.எம்.ஐ., குறியீடு, 52.2 புள்ளியாக உயர்ந்து உள்ளது. இது, ஆகஸ்டில், 51.7 புள்ளியாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளை தாண்டினால், அது வளர்ச்சியை குறிக்கும். இதன்படி, தயாரிப்பு துறை, தொடர்ந்து, 14 மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது. உள்நாட்டில் விற்பனை அதிகரித்துள்ளது; ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது. தயாரிப்பு நிறுவனங்களுக்கு, புதிய, ‘ஆர்டர்’கள் அதிகம் கிடைத்துள்ளன.அதேசமயம், மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அதற்கேற்ப, நிறுவனங்கள் விற்பனை விலையை சற்று உயர்த்தியுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடிப்படை உலோகங்கள், ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக், உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட, எட்டு பிரிவுகளில், 400 நிறுவனங்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|