பதிவு செய்த நாள்
02 அக்2018
01:09
மும்பை:ரிசர்வ் வங்கியின், நிதிக் கொள்கை குழு கூட்டம், நாளை துவங்குகிறது. மூன்று நாள் நடைபெறும் இக்கூட்டத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட சவால்களை சமாளிக்க, ‘ரெப்போ’ வட்டி மீண்டும் உயர்த்தப்படலாம் என, தெரிகிறது.கச்சா எண்ணெய் விலை, 81 டாலரை எட்டியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 73ஐ நெருங்கிஉள்ளது.
இந்நிலையில், ஆறுதல் அளிக்கும் அம்சமாக, ஜூலையில், 4.17 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், ஆகஸ்டில், 3.69 சதவீதமாக குறைந்து உள்ளது.இருந்தபோதிலும், ‘ரிசர்வ் வங்கி, ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்த, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்தும்’ என, மார்கன் ஸ்டான்லி உள்ளிட்ட நிதிச் சேவை நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
கடந்த, 2014, மே மாதம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த பின், ரிசர்வ் வங்கி, முதன் முறையாக இந்தாண்டு, ஏப்., 6ல், ரெப்போ வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்தி, 6.25 சதவீதமாக நிர்ணயித்தது.
இதையடுத்து, ஆகஸ்டில் மீண்டும், 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், வரும் வெள்ளியன்று, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நிதிக் கொள்கை குழு அறிக்கையில், மீண்டும் ரெப்போ வட்டி, 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.75 சதவீதமாக நிர்ணயிக்கப்படும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|