பதிவு செய்த நாள்
03 அக்2018
00:42
மத்திய அரசு, காப்பீட்டு தரகுச் சேவையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து, பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களை, மக்களிடம் சேர்த்து, அவர்களை காப்பீட்டு தாரர்களாக மாற்றுவதில், காப்பீட்டு தரகர்களின் பங்கு, முக்கியமானது.தற்போது, காப்பீட்டு துறையில், 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இதில், காப்பீட்டு தரகுச் சேவை, காப்பீட்டு நிறுவனங்கள், மூன்றாம் நபர் காப்பீட்டு திட்ட நிர்வாகிகள், கள ஆய்வாளர்கள் மற்றும் இழப்பு மதிப்பீட்டாளர்கள் ஆகியோர் அடங்குவர்.
இவற்றுள், காப்பீட்டு தரகுச் சேவை பிரிவில் மட்டும், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, நிதியமைச்சக உயரதிகாரிகள், பிரதமர் அலுவலகம் மற்றும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் ஆலோசனை மேற்கொண்டனர்.விரைவில், இது குறித்து முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது.கடந்த, 2015 நிலவரப்படி, இந்தியாவில், காப்பீட்டு தரகர்களின் பங்கு, 3.4 சதவீதமாக உள்ளது. இது, சர்வதேச சராசரியான, 6.2 சதவீதத்தை விட குறைவு.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|