தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ...  சேவைகள் துறையில் மிதமான வளர்ச்சி சேவைகள் துறையில் மிதமான வளர்ச்சி ...
தீபாவளி பலகார மூலப்பொருள் விலை 10 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2018
12:21

ஈரோடு: தீபாவளி பலகாரம் தயாரிக்க பயன்படும் எண்ணெய், பருப்பு, ஏலக்காய், மிளகு உட்பட பல்வேறு பொருட்கள், 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.தீபாவளிக்கு, 32 நாட்களே உள்ள நிலையில், சில்லரை வியாபாரிகள், தீபாவளி பலகாரங்கள் செய்து விற்பனை செய்வோர், தீபாவளி சீட்டு பிடித்து பலகாரங்கள் வழங்குவோர், தற்போதே மளிகை பொருட்களை வாங்கி வருகின்றனர்.


கடந்தாண்டு தீபாவளியை ஒப்பிடுகையில், நடப்பாண்டில், பல்வேறு காரணங்களால் மளிகை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை, 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.இது குறித்து, ஈரோடு, கொங்காலம்மன் அனைத்து வியாபாரிகள் சங்க துணைத் தலைவர், விமல் கருப்பணன் கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வாகன வாடகை உயர்வு, ஜி.எஸ்.டி., அமல், இறக்குமதி அதிகரிப்பு போன்ற காரணத்தால், 10 சதவீதத்துக்கு மேல் மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. சன்பிளவர் ஆயில், பாமாயில், டால்டா போன்றவை, 16 லிட்டர் டின், 150 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மொத்த விலையில் கிலோவுக்கு, 10 ரூபாய், சில்லரை விலையில், 12 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.பட்டாணி, கறுப்பு மற்றும் வெள்ளை சுண்டல், பொட்டுக்கடலை, துவரம் பருப்பு போன்றவை, கடந்த மாதத்தை ஒப்பிடுகையில், 5 முதல், 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.கேரளாவில் அதிகளவில் மழை பெய்ததுடன், நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏலக்காய், மிளகு வரத்து குறைந்தது. இதனால், ஏலக்காய் கிலோவுக்கு, 300 ரூபாய் உயர்ந்துள்ளது. மிளகு, 500 ரூபாயில் இருந்து, 650 ரூபாயாக உயர்ந்துள்ளது.டீசல் விலை உயர்வு, லாரி வாடகை உயர்வால், கடலை மாவு, கடலை பருப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை சுண்டல், சோள மாவு, பொட்டுக்கடலை, எள் போன்றவற்றின் விலை, 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தீபாவளி நெருங்கும் நிலையில், மேலும் உயர வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)