பதிவு செய்த நாள்
05 அக்2018
00:08
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை, கடந்த செப்டம்பரில், மிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.
இது குறித்து, ‘நிக்கி – மார்க்கிட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கச்சா எண்ணெய் விலையேற்றம், ரூபாய் வெளி மதிப்பு குறைவு போன்றவற்றால், தேவை குறைந்துள்ளது.இதன் காரணமாக, செப்டம்பரில் சேவைகள் துறை மிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. இத்துறையின் வளர்ச்சியை குறிக்கும், நிக்கி இந்தியாஎஸ்.பி.ஏ.ஐ., குறியீடு, 50.9 புள்ளிகளைஎட்டியுள்ளது.இது, ஆகஸ்டில், 51.5 ஆக இருந்தது. இக்குறியீடு, 50 புள்ளிகளை தாண்டினால், வளர்ச்சியாக கருதப்படும்.
கடந்த நான்கு மாதங்களில், செப்டம்பரில் தான், சேவைகள் துறை வளர்ச்சி, குறைவாக இருந்தது. அதே சமயம், தகவல் தொழில்நுட்ப துறையில், புதிய ஆர்டர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இதனால், சேவைகள்துறை நிறுவனங்கள், மிகுந்த நம்பிக்கையுடன், தொடர்ந்து, 13 மாதங்களாக, பணியாளர் எண்ணிக்கையை உயர்த்தி வருகின்றன.
அதே சமயம், சேவைகள் துறையில், நிதி, காப்பீடு, வியாபாரம் ஆகிய பிரிவுகளின் வளர்ச்சி குறைந்துள்ளது.கடந்த மாதம், தயாரிப்பு துறையின் உற்பத்தி, ஓரளவு அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|