பதிவு செய்த நாள்
05 அக்2018
00:10
புதுடில்லி:மத்திய அரசு, ‘பாரத் -22 இ.டி.எப்.,’ திட்டத்தை, வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் அறிமுகப்படுத்துவது குறித்து,பரிசீலித்து வருகிறது.
கடந்த,
2017 நவம்பரில், 16 பொதுத் துறை நிறுவனங்கள், மூன்று பொதுத் துறை
வங்கிகள், மூன்று தனியார் நிறுவனங்களைக் கொண்ட, பாரத்- 22
இ.டி.எப்., திட்டம் அறிமுகமானது. இதில், 14,500 கோடி ரூபாய்
திரட்டப்பட்டது.மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், இத்திட்டம் பட்டியலிடப்பட்டு, வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூன் மாதம் இரண்டாம் கட்ட, பாரத் -22 இ.டி.எப்., திட்டம் மூலம், 8,400 கோடி ரூபாய்
திரட்டப்பட்டது.முதலீட்டாளர்களிடம்
பெரும் ஆதரவை பெற்ற இத்திட்டத்தை, தற்போது, வெளிநாட்டு பங்குச்
சந்தையிலும் அறிமுகப்படுத்துவது குறித்து, மத்திய அரசு
பரிசீலித்து வருகிறது.அவ்வாறு வெளியிட முடிவு செய்தால், பட்டியலிட உகந்த அன்னிய பங்குச் சந்தை குறித்த விபரங்களை, வணிக வங்கிகள் வழங்கும்.
பாரத்
-22 இ.டி.எப்., பில், ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, ஐ.ஓ.சி., நால்கோ,
கெயில் உள்ளிட்ட, 16 பொதுத் துறை நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.இவற்றுடன்,
எஸ்.பி.ஐ., இந்தியன் பேங்க், பேங்க் ஆப் பரோடா ஆகிய, மூன்று பொதுத் துறை
வங்கிகள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த, ஆக்சிஸ் பேங்க்,
ஐ.டி.சி., எல் அண்டு டி ஆகியவை இடம் பெற்று உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|