பதிவு செய்த நாள்
05 அக்2018
00:11
மும்பை:ரூபாய் மதிப்பு
வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால்,
பங்குச் சந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும், பங்குச் சந்தைகள் சரிவால், முதலீட்டாளர்கள், 5 லட்சம் கோடி ரூபாயை இழந்து உள்ளனர். மும்பை
பங்குச் சந்தை நேற்றும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ்
குறியீட்டு எண், 806.47 புள்ளிகள் குறைந்து, 35169.16 என்ற நிலையை
எட்டியது. தேசிய பங்குச் சந்தையும், 259 புள்ளிகள் சரிந்து,
10599.25 என்ற நிலைக்கு கீழிறங்கியது.
நேற்றைய தினம், சந்தையின்
இந்த சரிவுக்கு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இது வரை
இல்லாத அளவுக்கு, 73.81 எனும் நிலையை தொட்டு, வீழ்ச்சியை
சந்தித்ததும், உலக சந்தையில், கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென
உயர்ந்ததும் காரணமாக அமைந்தன.
அதுமட்டுமின்றி, ஆசிய
சந்தைகளின் மந்தமான நிலையும், ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன்
துவங்கியதும், உள்நாட்டு சந்தையை பாதித்தன.
தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி மற்றும் வாகனங்கள் ஆகிய துறைகளின்சரிவால், சென்செக்ஸ் கீழிறங்கியது.இதற்கு முன், மும்பை பங்குச் சந்தை, ஜூலை 2ம் தேதி, 35022.12 என்ற அளவுக்கு சரிவைசந்தித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|