சேவைகள் துறையில் மிதமான வளர்ச்சி சேவைகள் துறையில் மிதமான வளர்ச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
78 இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை மோசடி, ஊழல், கூட்டுச் சதி செய்ததாக குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2018
00:12

வாஷிங்டன்:உலக வங்கி, அதன் திட்­டங்­களை செயல்­ப­டுத்த, 78 இந்­திய நிறு­வ­னங்­கள் மற்­றும் சில தனி நபர்­க­ளுக்கு தடை விதித்­துள்­ளது.


மோசடி, ஊழல், கூட்டுச் சதி, நிர்ப்­பந்­தித்­தல், கட்­டா­யப்­ப­டுத்­து­தல் ஆகிய புகார்­கள் தொடர்­பாக, இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.இது குறித்து, உலக வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை:


இந்­தி­யா­வைச் சேர்ந்த, ஆலிவ் ஹெல்த் கேர், ஜெய்­மோடி நிறு­வ­னங்­கள், வங்­க­தே­சத்­தில், உலக வங்­கி­யின் திட்­டங்­களை மேற்­கொண்­டுள்­ளன.இந்­நி­று­வ­னங்­கள், மோசடி, லஞ்ச ஊழ­லில் ஈடு­பட்­ட­தால், அத்­திட்­டங்­களை மேற்­கொள்ள தடை விதிக்­கப்­பட்­டுள்­ளன. இனி, ஆலிவ் ஹெல்த் நிறு­வ­னம், 10 ஆண்­டு­களுக்கு உலக வங்­கி­யின் திட்­டங்­களை செயல்­ப­டுத்த முடி­யாது. ஜெய்­மோடி நிறு­வ­னத்­திற்கு, 7.6 ஆண்­டு­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.


எத்­தி­யோப்­பியா மற்றும் நேபா­ளத்­தில் திட்டங்­களை மேற்­கொண்டு வரும், இந்­தி­யா­வின் ஆஞ்­ச­லிக் இன்­டர்­நே­ஷ­னல் நிறு­வ­னம் மீது, மோசடி மற்­றும் லஞ்ச ஊழல் புகார்­கள் உள்­ளன.
இந்­நி­று­வ­னத்­திற்கு, உலக வங்­கி­யின் திட்டங்­களை மேற்­கொள்ள, 4.6 ஆண்­டு­கள் தடை விதிக்கப்­பட்­டுள்­ளன.


அர்­ஜென்­டினா மற்­றும் வங்­க­தே­சத்­தில் திட்­டங்­களை செயல்­ப­டுத்­தும், இந்­தி­யா­வின், ‘பேமிலி கேர்’ நிறு­வ­னத்­திற்கு, நான்கு ஆண்­டு­கள் தடை விதிக்கப்­பட்­டுள்­ளது.‘மதுக்­கான் புரா­ஜெக்ட்ஸ், ஆர்.கே.டி., கன்ஸ்ட்­ரக் ஷன்’ ஆகிய நிறுவனங்­க­ளுக்கு, முறையே, இரண்டு மற்றும் 1.6 ஆண்­டு­கள் தடை விதிக்கப்­பட்­டுள்­ளன.இந்த வகை­யில், இந்­தி­ யா­வைச் சேர்ந்த, 78 நிறு­வ­னங்­கள் மற்­றும் சில நபர்­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.


ஓராண்டு தடை


இந்­தி­யா­வைச் சேர்ந்த, ‘தத்வி குளோ­பல்என்­வி­ரோன்­மென்ட், எஸ்.எம்.இ.சி., (இந்­தியா), மெக்­லாய்ட்ஸ் பார்­மா­சூட்­டிக்­கல்’ உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள், உலக வங்­கி­யின் திட்­டங்­களை மேற்­கொள்ள, ஓராண்டு வரை தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. ஐந்து நிறு­வ­னங்­க­ளுக்கு, நிபந்­தனை அடிப்­ப­டை­யில், பணியை தொடர அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)