பதிவு செய்த நாள்
05 அக்2018
00:15
புதுடில்லி:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் இயக்குனர் பொறுப்பில் இருந்து, சந்தா கோச்சார்விலகினார்.
வீடியோகான்
நிறுவனத்திற்கு, 3,600 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கணவர் தீபக்
கோச்சார் நிறுவனத்திற்கு ஆதாயம் பெற்றுத் தந்ததாக, சந்தா கோச்சார்
மீது குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து, சி.பி.ஐ., செபி, வருமான வரி துறை ஆகிய அமைப்புகள், விசாரணை நடத்தி
வருகின்றன.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, முன்னாள் நீதிபதி, ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில், தனி விசாரணைக்கு உத்தர விட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம், சந்தா கோச்சார் விடுப்பில் சென்றார்.
அறிக்கை
இந்நிலையில்
நேற்று, சந்தா கோச்சார் பதவி விலகினார். இது குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ.,
வங்கி இயக்குனர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:சந்தா கோச்சார் பதவிக்
காலம், 2019, மார்ச் வரை உள்ளது. ஆனால், அதற்கு முன் ஓய்வு பெற
விரும்புவதாக, அவர் விண்ணப்பித்தார். இதை, இயக்குனர் குழு ஏற்றுக்
கொண்டது.
வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல்
அதிகாரியாக, தலைமை செயல்பாட்டு அதிகாரியான, சந்தீப் பக் ஷி
நியமிக்கப்பட்டுள்ளார். அவர், 2023, அக்., 3ம் தேதி வரை, பதவி
வகிப்பார்.சந்தா கோச்சார் ஓய்வு பெற்றாலும், அவர் தொடர்பான, ஸ்ரீ கிருஷ்ணா விசாரணையில் எந்த பாதிப்பும் இருக்காது.
பரபரப்பு
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இயக்குனர் குழுவில், தனி இயக்குனராக பதவி வகித்த, மல்லையா பதவி விலகியுள்ளார்.அது போல, வங்கியின் துணை நிறுவனங்களின் இயக்குனர் குழுக்களில் இருந்தும், சந்தா கோச்சார் விலகுவார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சந்தா கோச்சாரின் திடீர் விலகல், வங்கி வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.மிக குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவர், வீடியோகான் பிரச்னையால், பெரும் சரிவை சந்தித்துள்ளார்.
பயிற்சியாளர் முதல் பத்மபூஷண் வரை
* சென்னையில், 1961ல் பிறந்த சந்தா கோச்சார், சென்னை பல்கலையில் பட்டம் பயின்றார்
* ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாக பயிற்சியாளராக, 1984ல் சேர்ந்தார்
* திறமையான செயல்பாட்டால், படிப்படியாக உயர் பொறுப்புகளுக்கு உயர்ந்தார்
* 1994ல், உதவி பொது மேலாளர்; 1996ல், துணை பொது மேலாளர் பதவிகளை வகித்தவர்
* 1998ல், பொது மேலாளராக பதவி உயர்வு பெற்று, மின்னணு வணிகப் பிரிவின் தலைவராகவும்பணியாற்றினார்
*
2003ல் சில்லரை பிரிவு தலைவர் என்ற முறையில், குஜராத்தில், வங்கி
நிதி நெருக்கடி பிரச்னையை வெற்றிகரமாக தீர்த்து வைத்தார்
* 2007ல், வங்கி தலைமை நிதி அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார்
* 2008ல் சர்வதேசபொருளாதார மந்தநிலையின் போது, வங்கி குறித்த வதந்திகளுக்கு, திறமையான செயல்பாடுகளால் முற்றுப்புள்ளி வைத்தார்
*
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதிகாரியாக, 2009ல் பொறுப்பேற்று,
மிக இளம் வயதில் இப்பதவியை அலங்கரித்தவர் என்ற சிறப்பை பெற்றார்
*
செலவு, கடன், மூலதனம், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு என்ற, 4சி’
இலக்குடன் செயல்பட்டு, வங்கியை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தார்
* வாராக் கடன் பிரச்னைகளுக்கு உடனடிநடவடிக்கை தான் சிறந்த தீர்வு என்பதை நிரூபித்தார்
* நேர நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். காரில் செல்லும்போதே, மொபைல் போனில்வங்கிப் பணிகளை மேற்கொள்வார்
*
குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க தவறமாட்டார். மாலை, 6:00 மணிக்கு
வீட்டிற்கு சென்றாலும், குழந்தைகளை கொஞ்சுவதுடன், அவ்வப்போது
அலுவலக பணிகளையும் கவனிப்பார்
*தலைமை செயல் அதிகாரி
பொறுப்பிற்கு வந்தபோதும், நேரம் கிடைத்தால், மதியம், அலுவலகம்
அருகே உள்ள வீட்டில், கணவர், குழந்தைகளுடன் உணவருந்துவார்
* சர்வதேச நிதி மாநாட்டு தலைவர், இந்திய வங்கிகள் சங்க துணைத் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளார்
* மத்திய அரசு, 2011ல் சந்தா கோச்சாருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது
* டைம் பத்திரிகை, 2015ல், உலகில் மிக செல்வாக்கான, 100 பேரில் ஒருவராக சந்தா கோச்சாரை தேர்வு செய்தது
*
பார்ச்சூன் பத்திரிகை, 2016ல் வெளியிட்ட, உலகின் மிக சக்தி வாய்ந்த
பெண்மணிகள் பட்டியலில், சந்தா கோச்சார், ஐந்தாவது இடத்தை
பிடித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|