பதிவு செய்த நாள்
05 அக்2018
15:16
மும்பை : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்த சிறிது நேரத்திலேயே சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக கடுமையாக வீழ்ச்சி அடைந்து, 74.13 என்ற நிலையை எட்டியது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த ரூபாய் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது சரிவிலிருந்து மீண்டு, சிறிது உயர்ந்தது. 9 காசுகள் உயர்ந்து 73.49 ஆனது. இது முதலீட்டாளர்களிடையே சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்றைய பிற்பகல் வர்த்தகத்தின் போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 55 காசுகள் வீழ்ச்சி அடைந்து 74.13 ஆனது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திடீரென முதலீடுகளை நிறுத்தியதாலும், தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை வருவதாலும் ரூபாய் மதிப்பு மிக கடுமையாக சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவின் எதிரொலியாக பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் 584 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|