பதிவு செய்த நாள்
05 அக்2018
23:16
– நமது நிருபர் –பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இரண்டாவது காலாண்டில், 28 சதவீதம் வருவாய் குறைவை சந்தித்துள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வருவாய் குறைவு என்பது, 24 சதவீதம் முதல், 34 சதவீதம் வரை இருக்கும். இது, காலாண்டுக்கு ஒரு முறை மாறுபடும். தற்போதைய இரண்டாவது காலாண்டில், 28 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது.அனைத்து வட்டங்களிலும் இந்த வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு, பிராட் பேண்ட் கட்டணம் குறைப்பு, மொபைல் இன்டர்நெட் கட்டணம் குறைப்பு என வாடிக்கையாளர்களை கவர, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது முக்கிய காரணமாகும்.வருவாயை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|