பதிவு செய்த நாள்
06 அக்2018
01:32
புதுடில்லி:‘‘இந்தியா – ரஷ்யா இடையே, வைர இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பாக, அரசு மட்டத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
அவர், இந்திய தொழிலக கூட்டமைப்பின் கருத்தரங்கில் மேலும் பேசியதாவது:
ரஷ்யாவில், அபரிமிதமான வைர வளம் உள்ளது. இந்தியா, உலகிலேயே வைரங்களை வெட்டி, பட்டை தீட்டும் தொழிலில், முதலிடத்தில் உள்ளது. ஆகவே ரஷ்யா, வைரங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யலாம்.அவற்றை நறுக்கி, பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக மாற்றி, இந்தியா மறுபடியும் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யலாம்.இதனால், இரு நாடுகள் இடையே, நடப்பு கணக்கு பற்றாக்குறை எந்தவிதத்திலும் பாதிக்காது. இரு நாடுகளும் பயன் பெறலாம்.இதற்காக, இரு நாடுகளும், அரசு மட்டத்தில் ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது.
ரஷ்யா, இந்தியாவிற்கு மரங்களை ஏற்றுமதி செய்ய விரும்பினாலும், அது குறித்த செயல் திட்டத்தை உருவாக்கலாம்.ரஷ்ய நிறுவனங்கள், இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்க, ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரே அமைச்சகத்தின் கீழ், அனைத்து துறைகளின் ஒப்புதலையும் பெறலாம்.டில்லி – மும்பை நெடுஞ்சாலை தொழில் தடத்தில், ரஷ்ய நிறுவனங்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|