பதிவு செய்த நாள்
06 அக்2018
01:36
மும்பை:நேற்று, வங்கிகளுக்கான ரெப்போ வட்டியில் மாற்றமில்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு, சந்தையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருந்ததால், இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.இதற்கு, சர்வதேச நிலவரங்களும் துணை புரிந்தன.
அமெரிக்க கடன் பத்திரங்கள் மீதான வட்டி வருவாய், பல ஆண்டுகள் காணாத வகையில் உயர்ந்து வருகிறது. அத்துடன், அமெரிக்க மத்திய வங்கி, மீண்டும் வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, சர்வதேச அளவில் பங்குகள் அதிகம் விற்பனையாகின.இதனால், இந்தியா உட்பட, சர்வதேச பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, 792.17 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 34376.99 புள்ளியில் நிலை கொண்டது. கடந்த, ஏப்., 23ல் காணப்பட்ட, 34450.77 என்ற நிலைக்கும் கீழாக, சென்செக்ஸ் முதன் முறையாக,இந்த அளவு குறைந்துள்ளது.கடந்த இரண்டு நாட்களில், சென்செக்ஸ், 1356.98 புள்ளிகளை இழந்து உள்ளது.நேற்று, தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு,282.80 புள்ளிகள் குறைந்து, 10316.45 புள்ளிகளில் நிலை கொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|