பதிவு செய்த நாள்
07 அக்2018
01:42
புதுடில்லி:சில தினங்களுக்கு முன், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சார், பதவிக் காலத்திற்கு முன் விலகிய நிலையில், மேலும் இரு தனியார் வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளும், பதவிக் காலம் முடியும் முன், ஓய்வு பெற உள்ளனர்.
வீடியோகான் நிறுவனத்திற்கு, 3,600 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கணவரின் நிறுவனங்கள் ஆதாயம் பெற உதவியதாக, சந்தா கோச்சார் மீது குற்றச்சாட்டு உள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிஇது தொடர்பாக, சி.பி.ஐ., வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகளுடன், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியும் விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, சந்தா கோச்சார், தன் பதவிக் காலம் முடிய ஆறு மாதங்கள் உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன், திடீரென பதவி விலகினார்.இதையடுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, சந்தீப் பக் ஷி பொறுப்பேற்று உள்ளார்.ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைப்படி, பல வங்கிகள் அவற்றின் இடர்ப்பாட்டு கடன்களை சீரமைத்து வருகின்றன.
இதனால், வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து, அதற்கான ஒதுக்கீடு காரணமாக, இழப்பு அதிகரித்துள்ளது.ஆக்சிஸ் வங்கிஇந்த வகையில், ஆக்சிஸ் வங்கியின் வாராக்கடன், 2014 – 17ம் நிதியாண்டுகளில், ஐந்து மடங்கு உயர்ந்து, 4,110 கோடியில் இருந்து, 21,280 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், வங்கியின் நிகர லாபம், 7,358 கோடியில் இருந்து, 3,679 கோடி ரூபாயாக சரிந்து உள்ளது.
இந்நிலையில், ஆக்சிஸ் வங்கி இயக்குனர் குழு, தலைமை செயல் அதிகாரி ஷிகா சர்மாவின் பதவிக் காலத்தை, ஜூன் 1 முதல், மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்தது.யெஸ் பேங்க்ஆனால், இதை ஏற்க, ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. அதனால், இந்தாண்டு இறுதியில் பதவி விலகுவதாக, ஷிகா சர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த, 2004ல், ராணா கபூர், அசோக் கபூர் ஆகியோரால் துவக்கப்பட்ட, யெஸ் பேங்க், தனியார் துறையில், நான்காவது பெரிய வங்கியாக குறுகியகாலத்தில் உயர்ந்தது.இதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, ராணா கபூர் தொடர்ந்து இருந்து வருகிறார். இந்நிலையில், ‘புதிய விதிமுறைகளின் படி, ராணா கபூர், 2019, ஜனவரியில் பதவி விலகி, புதியவரை நியமிக்க வேண்டும்’ என, ரிசர்வ் வங்கி கூறியது.
இதை ஏற்க மறுத்த ராணா கபூர், தனக்கு மேலும் மூன்று ஆண்டுகள், அதாவது, 2021 வரை பதவியில் நீட்டிக்க அனுமதி வழங்க வேண்டும் என, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்தார். இதை, கடந்த வாரம், ரிசர்வ் வங்கி நிராகரித்தது. அதனால், அடுத்த ஆண்டு ஜனவரியில், ராணா கபூர், யெஸ் பேங்க் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து வெளியேற உள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, அடுத்த நான்கு மாதங்களில், இரு முன்னணி வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள் விலக உள்ளனர். அதற்குள், வேறு சில வங்கிகளின் தலைமையில் மாற்றம் நிகழ்ந்தாலும் ஆச்சரியம் இல்லை என, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கண்டுபிடிப்பு
ரிசர்வ் வங்கி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, வாராக்கடன் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அதில், வாராக்கடன் பிரிவில், வங்கிகள், 6 லட்சம் கோடி ரூபாய் சேர்க்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக, வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு, பணி நீட்டிப்பு வழங்காமல், புதியவர்களை நியமிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|