பதிவு செய்த நாள்
07 அக்2018
03:07
சென்னை:இந்தியன் வங்கி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் அன்னியச் செலாவணியில் மேற்கொள்ளும், எப்.சி.என்.ஆர்., (பி) டெபாசிட்டுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது.
இதன்படி, 1 – -2 ஆண்டு வரையிலான டெபாசிட்டுக்கு, வட்டி, 3.68 சதவீதத்தில் இருந்து, 3.78 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், 2 – -3 ஆண்டு டெபாசிட்டிற்கு, வட்டி, 3.88 சதவீதத்தில் இருந்து, 3.98 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர், வெளிநாட்டினர் ஆகியோர், 3 – -4 ஆண்டுகள் வரை மேற்கொள்ளும் டெபாசிட்டிற்கான வட்டி, 3.92 சதவீதத்தில் இருந்து, 4.06 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் முதல், ஐந்து ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டிற்கு, வட்டி, 3.99 சதவீதத்தில் இருந்து, 4.07 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு, 4.10 சதவீத வட்டி வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது. இதனால், வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து அதிக அளவில் டெபாசிட் திரட்டும் நோக்கில், ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|