மூலதன ஆதாய வரி சலுகை: புதிய விதிமுறைகள் வெளியீடு மூலதன ஆதாய வரி சலுகை: புதிய விதிமுறைகள் வெளியீடு ... காப்பீட்டை அதிகம் நாடும் இந்தியர்கள் காப்பீட்டை அதிகம் நாடும் இந்தியர்கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘மியூச்சுவல் பண்ட்’ முதலீட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2018
00:05

‘மியூச்சுவல் பண்ட் முதலீட்டை நாடும் முதலீட்டாளர்கள், வழக்கமாக பலரும் செய்யும் தவறுகளை தவிர்க்க வேண்டும்’ என, வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.


முதலீட்டு உத்தி என்பது, நிதி இலக்குகளின் அடிப்படையில் அமைந்த நிதி திட்டமிடலுக்கு ஏற்ப அமைய வேண்டும். எனினும், பலரும் பல்வேறு காரணங்களால், முதலீடு செய்யும் போது தவறான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். நிதி இலக்குகளை மனதில் கொள்ளாமல், சந்தையின் போக்கு உள்ளிட்ட வேறு காரணங்களை முக்கியமாக கருதி செயல்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது. முக்கியமாக தவறான அடிப்படையில், முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.


அந்த வகையில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் பரவலாக முதலீட்டாளர்கள் செய்யும் தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர்.மியூச்சுவல் பண்ட் சிறந்த முதலீடு தேர்வாக அமைகிறது. இவை பங்குச்சந்தையின் பலனையும் பெற வழிவகுக்கின்றன. தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ள பல வகையான மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், பல முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்ட் தேர்வை தவறான காரணங்களால் மேற்கொள்ளும் சூழல் நிலவுகிறது.


டிவிடென்ட் ஏன்?


இதற்கான உதாரணமாக, அண்மை காலங்களில், ‘பாலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்’ திட்டங்களை, பலரும் அதிக அளவில் நாடியதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சமபங்குகளில் பெரும்பகுதி முதலீடு மற்றும் எஞ்சியவற்றை நிலையான வருமான வழிகளில் முதலீடு செய்யும் திட்டங்களாக பாலன்ஸ்டு பண்ட் அமைகின்றன. இவை சந்தையின் ஏற்ற இறக்கத்தை சமாளிக்க வல்லவையாக கருதப்படுகின்றன. மேலும் இவற்றில், சில திட்டங்கள் டிவிடென்ட் அளிக்கும் பிரிவைச் சேர்ந்தவையாகவும் இருந்தன.


எனவே, பல முதலீட்டாளர்கள் இதனால், கவரப்பட்டனர்.ஆனால், டிவிடென்ட் வாய்ப்பை மட்டும் கருத்தில் கொண்டு பாலன்ஸ்ட் பண்ட் திட்டத்தை தேர்வு செய்வது சரியாக இருக்காது என்கின்றனர். அதிலும் குறிப்பாக முதலீட்டாளர்கள் சிலர், டிவிடென்டை கூடுதல் பலன் என, நினைத்து கொள்கின்றனர். உண்மையில், பண்ட் ஈட்டும் பலனில் ஒரு பகுதி டிவிடென்டாக அளிக்கப்படுகிறது. இவற்றை நிலையான வருமானம் தருபவையாக கருதுவதும் தவறாக அமையும். இந்த நிதிகளும் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டவை. இவற்றில் முதலீடு செய்தால் நீண்ட கால நோக்கில் அதிக ரிஸ்க்குடன் அதிக பலன் பெற வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


ரிஸ்க் அம்சம்!



அதே போல, குறிப்பிட்ட பிரிவு முன்னிலையில் இருக்கும் போது அத்துறை சார்ந்த நிதிகளில் சந்தையின் பரபரப்பை மட்டும் மனதில் கொண்டு முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். பொதுவாக துறை சார்ந்த நிதிகளில் தனித்தன்மையான அம்சங்களை கொண்டிருந்தால் மட்டுமே அவற்றை பரிசீலிக்க வேண்டும் என்கின்றனர்.


முக்கியமாக, தேர்வு செய்யும் நிதியின் அடிப்படை அம்சங்களை புரிந்து கொண்டு அவை ஏற்றதா என, பார்க்க வேண்டும்.‘டெப்ட் பண்ட்’ எனப்படும் கடன்சார் நிதிகள், பல காரணங்களால் முதலீட்டாளர்களை கவரலாம். ஆனால், இவற்றிலும் ரிஸ்க் இருப்பதை உணர வேண்டும். இவற்றை தேர்வு செய்யும் முன், கடன்சார் நிதிகள் சார்ந்த கிரெடிட் ரிஸ்க் மற்றும் வட்டி விகித ரிஸ்க் அம்சங்களை அறிந்திருக்க வேண்டும். கடன்சார் நிதிகள் முதலீடு செய்யும் பத்திரங்கள் உள்ளிட்டவை அளிக்கும் பலன் தொடர்பான ரிஸ்காக இவை அமைகின்றன. எனவே, அடிப்படை அம்சங்கள் மற்றும் நிதி இலக்குகளை மனதில் கொள்வது அவசியம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)