‘பிளிப்கார்ட்’டில் தற்காலிக வேலை ‘பிளிப்கார்ட்’டில் தற்காலிக வேலை ...  அப்படியா அப்படியா ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பஞ்சாப் நேஷனல் வங்கி வாராக்கடன் வசூல் எவ்வளவு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2018
23:42

சென்னை:‘‘பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் வசூல், ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், 13 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்,’’ என, அதன் தலைமை செயல் அதிகாரி, சுனில் மேத்தா தெரிவித்து உள்ளார்.
சென்னையில், அவர் புதிய கிளை மற்றும் மையங்களை திறந்து வைத்து, பேசியதாவது:பஞ்சாப் நேஷனல் வங்கி, 125வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு, சென்னையில், 7,000வது கிளை திறக்கப்பட்டுள்ளது. இது தவிர, கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை செயல்படுத்தும் மையம் மற்றும் மாநில வணிக நிதி மையம் ஆகியவை திறக்கப்பட்டு உள்ளன.
நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், செயல்பாட்டு லாபம், 13 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 8,445 கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது காலாண்டில், 13 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தணிக்கைக்கு பின், அதிகாரப்பூர்வ தொகை தெரியவரும்.செப்., வரையிலான அரையாண்டிற்கு வாராக்கடன் வசூல் இலக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்குவதற்கான முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடன் விண்ணப்பங்கள், மத்திய செயல்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.அங்கு பரிசீலிக்கப்பட்டு, மாநில வணிக நிதி மையத்துக்கு அனுப்பப்பட்டு, பின் கடன் அனுமதி வழங்கப்படும். மோசமான கடன் பிரச்னையை தவிர்க்க, இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக, செயல்பாட்டு லாப விகிதம் மேம்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)