பதிவு செய்த நாள்
09 அக்2018
23:26
புதுடில்லி:மின்னணு பணப் பரிவர்த்தனை சேவை சார்ந்த அனைத்து தகவல்களையும், இந்தியாவில் சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்த துவங்கி விட்டதாக, ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையில் உள்ள, அன்னிய நிறுவனங்கள், அக்., 15க்குள், உள்நாட்டில், பணப் பரிவர்த்தனை தகவல் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதை ஏற்று, தற்போது, சோதனை அடிப்படையில் வாட்ஸ் ஆப் மேற்கொண்டு வரும் மின்னணு பணப் பரிவர்த்தனை தகவல்களை, உள்நாட்டில் சேமிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளோம்.தற்போது, வாட்ஸ் ஆப் வாயிலான, 10 லட்சம் பேரின் பணப் பரிவர்த்தனை தகவல்கள், இந்தியாவில் சேமிக்கப்படுகின்றன. விரைவில், மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையை, நாடு முழுவதும் விரிவுபடுத்த உள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ‘கூகுள் பே, பே பால்’ உள்ளிட்ட அன்னிய மின்னணு பணப் பரிவர்த்தனை நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, உள்நாட்டு தகவல் சேமிப்பிற்கான அவகாசத்தை, மத்திய அரசு நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|