இந்தியாவில் தகவல் சேமிப்பு ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம், ‘ரெடி’ இந்தியாவில் தகவல் சேமிப்பு ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம், ‘ரெடி’ ...  இந்திய பொருளாதாரம் 7.4 4சதவீதமாக  முன்னேறும் இந்திய பொருளாதாரம் 7.4 4சதவீதமாக முன்னேறும் ...
மருத்துவ பரிசோதனை நிலையங்களில் மருத்துவ காப்பீடு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2018
23:31

புதுடில்லி:மருத்துவ காப்பீடுகளை, மருந்தகங்கள் மற்றும் பரிசோதனை நிலையங்கள் விற்பனை செய்வதை அனுமதிப்பது குறித்த ஆலோசனையில் இறங்கி உள்ளது, ஐ.ஆர்.டி.ஏ., எனும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்.


இது குறித்து ஆணையத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுவாக, ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் குறித்த விஷயங்களில் மக்களுடன் சிறப்பான தொடர்பில் இருப்பவை, மருந்தகங்களும் பரிசோதனை நிலையங்களும்தான். இவற்றை எளிதாக காப்பீட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த இயலும்.


மருந்தகங்கள் மற்றும் பரிசோதனை நிலையங்கள் மூலமாக, மருத்துவ காப்பீடுகளை விற்பனை செய்வதை அனுமதிப்பது குறித்த ஆலோசனைகள், விரைவில் கோரப்பட உள்ளன.ஒரு சில காப்பீட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இத்தகைய விற்பனைக்கு அனுமதி தரப்படும். காரணம், காப்பீடுகள் முறையாக விற்பனை செய்யப்பட வேண்டும்; அதில் எந்த தவறுகளும் நேர்ந்துவிடக்கூடாது என்பது தான்.


இதற்காக காப்பீட்டு நிறுவனங்கள், மருந்தகங்கள் மற்றும் பரிசோதனை நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும். பின், அவற்றில் உள்ள நபர்களுக்கு மருத்துவ காப்பீடு குறித்து பயிற்சி வழங்கும்.இந்த முயற்சியானது மூன்றாம் மற்றும் நான்காம் நிலை நகரங்களில் உள்ளவர்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.


இது குறித்து, ‘தைரோகேர்’ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஏ.வேலுமணி கூறியதாவது:நாடு முழுவதும் ஒரு லட்சம் பரிசோதனை நிலையங்கள் உள்ளன. மக்களுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்படும் போது, அவர்கள் நாங்கள் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள்வர். எனவே, மருத்துவ காப்பீட்டின் நன்மை குறித்து அவர்கள் அறிந்துகொள்ள, இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)