பதிவு செய்த நாள்
10 அக்2018
23:18
புதுடில்லி:
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் ஆராய்ந்து அறியும் பொறுப்பை, தனி அமைப்பிடம் ஒப்படைக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம், 91 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இக்குழுமத்தைச் சேர்ந்த பல நிறுவனங்கள், கடன் தவணை செலுத்த தவறின.இதையடுத்து, மத்திய அரசு, சமீபத்தில் இக்குழுமத்தின் இயக்குனர் குழுவை கலைத்து, உதய் கோட்டக் தலைமையில், புதிய இயக்குனர் குழுவை அமைத்தது.
இக்குழு, சில தினங்களுக்கு முன் கூடி விவாதித்த போது, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தில் எதிர்பார்த்ததை விட, சிக்கல் அதிகம் உள்ளது தெரியவந்தது.இந்நிலையில், உதய் கோட்டக், நேற்று, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சக செயலர், தபன் ராயை சந்தித்து, இயக்குனர் குழுவின் அறிக்கையை வழங்கினார்.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இயக்குனர் குழு, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தின் செலவை குறைக்க முடிவு செய்துள்ளது. மேலும், இக்குழும செயல்பாடுகளை ஆராய, நிதித் துறை ஆய்வில் சிறந்து விளங்கும் தனி அமைப்பை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், துல்லியமான விபரங்களை பெற்று, அதற்கேற்ப முடிவுகள் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|