ஐ.எல்., அண்டு எப்.எஸ்., ஆய்வுக்கு தனி அமைப்பை நியமிக்க முடிவு ஐ.எல்., அண்டு எப்.எஸ்., ஆய்வுக்கு தனி அமைப்பை நியமிக்க முடிவு ...  நான் அரசியலில் நுழைந்தால் மூன்றாம் உலக போர் மூளும் நான் அரசியலில் நுழைந்தால் மூன்றாம் உலக போர் மூளும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
உயர, ‘பறக்கிறது’ பஞ்சு விலை நுாற்பாலைத்துறையினர் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2018
23:20

திருப்பூர்:சீசன் துவக்கத்திலேயே பஞ்சு கொள்முதல் விலை, கேண்டி, 46,200 ரூபாயாக அதிகரித்ததால், ஜவுளித் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழக நுாற்பாலைகள், மஹாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா, ம.பி., மாநிலங்களில் பருத்தி பஞ்சு கொள்முதல் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், சீசன் துவக்கத்தில் பஞ்சு விலை குறைந்தும், நிறைவடையும்போது, விலை அதிகரித்தும் காணப்படும்.


கடந்த, 2017 –- 18 பருத்தி சீசன் துவக்கத்தில், 38,500 ரூபாயாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு கொள்முதல் விலை, சீசன் நிறைவில், 48,500 ரூபாயை எட்டியது. 2018 – 19 பருத்தி சீசனில், பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. ஒரு கேண்டி பஞ்சு கொள்முதல் விலை, 46,200 ரூபாயாக உள்ளது.நுாற்பாலைகளுக்கு வரும் போது, 47,800 ரூபாயாகிறது. சீசன் துவக்கத்திலேயே மூலப்பொருள் விலை உயர்ந்துள்ளது, தமிழக நுாற்பாலை துறையினரை கவலை அடைய செய்துள்ளது.


இது குறித்து, இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் அமைப்பு கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது:மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியுள்ளதால், தற்போது துவங்கியுள்ள புதிய சீசனில், பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது; ஒரு கேண்டி பஞ்சு கொள்முதல் விலை, 46,200 ரூபாயாக உள்ளது.டீசல் விலை உயர்வால், போக்குவரத்து செலவினம் அதிகரித்துள்ளது.


முந்தைய சீசனைவிட, நடப்பு சீசனில், மூலப்பொருளுக்கான மொத்த செலவினம், 19 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் நுால் விலையை உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)