பதிவு செய்த நாள்
10 அக்2018
23:32
புதுடில்லி, அக். 11–ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான, ‘அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், பேடிஎம் மால்‘ போன்ற நிறுவனங்கள், அடுத்த சில தினங்களுக்குள்ளாக, 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துவிடும் என, கணிக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடி விலை, உபயோகப்படுத்திய போன்களை வாங்கிகொள்வது உள்ளிட்ட அறிவிப்பால், இந்த அளவுக்கு விற்பனை அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது.இது குறித்து, கவுன்டர்பாயின்ட் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஸ்மார்ட் போன்களின் விற்பனையில், 42 சதவீதம் அளவுக்கு, ஆன்லைன் மூலமாக விற்பனை ஆவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நேற்று துவங்கி, 15ம் தேதி வரையிலான ஆறு நாட்கள் விற்பனைக்கு, வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஆன்லைன் மூலமான விற்பனைக்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
அமெரிக்காவின் கறுப்பு வெள்ளி, சீனாவின் சிங்கிள்ஸ் டே விற்பனைகளோடு ஒப்பிடும்போது, இந்தியா விரைவில் அந்த நிலையை எட்டிவிடும் என தெரிகிறது.இந்த ஆறு நாட்கள் விற்பனை, 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில், 7,400 கோடி ரூபாய் என்ற அளவுக்கு இருக்கும்.இத்தகைய விற்பனைக்கு மிக முக்கிய காரணம், பல்வேறு விலைகளில், புதிய புதிய போன்கள் தயாரிக்கப்பட்டு, சந்தைக்கு வருவது தான்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|