பதிவு செய்த நாள்
11 அக்2018
09:48
மும்பை : இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (அக்.,11, காலை 9.15 மணி நிலவரம்)இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் ரூபாய் மதிப்பு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட நெருக்கடியின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 10,200 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மிக கடுமையாக சரிந்துள்ளதும் இந்திய பங்குச்சந்தைகளின் கடும் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வர்த்தகம் துவங்கிய 5 நிமிடங்களிலேயே ரூ.5 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு 24 காசுகள் சரிந்து 74.45 என்ற நிலையை எட்டி உள்ளது. இறக்குமதியாளர்கள் இடையே டாலரின் தேவை அதிகரித்ததாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை திடீரென அதிக விற்றதால் உள்நாட்டு பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 74.21 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|