பதிவு செய்த நாள்
12 அக்2018
23:54
புதுடில்லி:இந்தியாவில், ஓர் ஆண்டின் முட்டை உற்பத்தி, விரைவில், 10 ஆயிரம் கோடியை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று, உலக முட்டை தினத்தை முன்னிட்டு, டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில், மத்திய வேளாண் துறை இணை அமைச்சர், பர்ஷோத்தம் ருபாலா பேசியதாவது:கோழி வளர்ப்பு தொழிலுக்கு அதிக முதலீடு தேவையில்லை. அதனால், சிறிய, நடுத்தர விவசாயிகள் கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
மத்திய அரசு, 2022ல், விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு தொழிலும் துணை புரியும். இந்தியாவில் கோழி வளர்ப்பு துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய வேளாண் துறை செயலர், தருண் ஸ்ரீதர் பேசும்போது, ‘‘ஓர் ஆண்டின் முட்டை உற்பத்தி, தற்போதைய, 9,000 கோடியில் இருந்து, விரைவில், 10 ஆயிரம் கோடியாக உயரும்,’’ என்றார். இந்தியாவில், முட்டை உற்பத்தி மற்றும் நுகர்வு அடிப்படையில், ஒரு நபருக்கு, ஆண்டுக்கு, 70 முட்டை தான் கிடைப்பதாக கூறப்படுகிறது. இது, 180 ஆக உயர வேண்டும் என, தேசிய ஊட்டச்சத்து மையம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|