பதிவு செய்த நாள்
13 அக்2018
00:04
புதுடில்லி:கடந்த செப்டம்பரில், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வால், சில்லரை பணவீக்கம், 3.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஆகஸ்டில், 3.69 சதவீதமாக குறைந்து இருந்தது.
கடந்த மாதம், சில்லரை பணவீக்கம், 0.08 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த, 4 சதவீத இலக்கிற்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது. *இந்தாண்டு ஆகஸ்டில், நாட்டின் தொழில் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.3 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, ஜூலையில், 6.5 சதவீதமாக இருந்தது.
கடந்த மே மாதம், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 3.9 சதவீதமாக இருந்தது. அதன் பின், இத்துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த நிலையில், சுரங்க உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால், ஆகஸ்டில், ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|