பதிவு செய்த நாள்
14 அக்2018
00:24
புதுடில்லி:மத்திய அரசு, நாளை வெளியிடும், தங்க சேமிப்பு பத்திரத்திற்கு, 1 கிராம், 3,146 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்துள்ளது.
வலைதளம் மூலமாகவோ அல்லது மின்னணு வழியிலோ மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால், ‘கிரெடிட், டெபிட்’ கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 3,096 ரூபாய்க்கு கிடைக்கும்.வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
முதற்கட்ட வெளியீடு நாளை துவங்குகிறது. 19ம் தேதி வரை, முதலீடு செய்யலாம். அக்., 23ல், இப்பத்திரங்கள், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். இதையடுத்து, 2019 பிப்ரவரி வரை, மாதந்தோறும், தங்க சேமிப்பு பத்திரங்கள் வெளியிடப்படும்.இதன்படி, இப்பத்திரங்கள், நவ., 5,- 9; டிச., 24, -28ம் தேதிகளில் வெளியிடப்படும்.
நான்காம் கட்ட, தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை, 2019, ஜன., 14ல் துவங்கி, 18ம் தேதி முடிவடையும். இறுதிக்கட்ட விற்பனை, பிப்., 4, -8 வரை நடைபெறும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|