பதிவு செய்த நாள்
14 அக்2018
23:57
அமெரிக்க பங்குச் சந்தைக்கும், அதன் பொருளாதாரத்திற்கும் ஒருவித இடைவெளி தோன்றிவிட்டதன் விளைவாக, கடந்த வாரத்தில், நாம் உலக சந்தைகளில் பரவலான அச்சத்தை கண்டோம்.சந்தை எப்போதும் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டது.
தற்கால சூழல் நன்றாகஇருந்தாலும், வருங்காலத்தை பிரதிபலிக்கும் இயல்பு, சந்தைகளுக்கு எப்போதும் உண்டு. அந்த இயல்பின் வெளிப்பாடு தான், கடந்த வாரம் உலக சந்தைகள் சந்தித்த நடுக்கம்.அமெரிக்க பொருளாதாரத்தின் தற்கால சூழல் குறித்து, பெரிய குறைகள் சொல்ல முடியாது. வரும் செய்திகளும், குறியீடுகளும் மிக பிரகாசமான வெளிப்படை தோற்றத்தையே தருகின்றன.
அமெரிக்க அதிபரும் பொருளாதாரத்தின் மீது, நம்பிக்கையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அமெரிக்க பொருளாதார வளர்ச்சி ஸ்திரமானதாகவும், உறுதியானதாகவும் தோன்றினாலும், அதன் நிலையாமை சார்ந்தஅச்சங்களே, சந்தையில் தெரிகின்றன.
கவலை
இந்த அச்ச உணர்வின் தோற்றமும், வளர்ச்சியும் திடீரென ஏற்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்க வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்ததன் விளைவு மட்டுமே, இந்த அச்ச உணர்வு.இன்னும் வட்டி விகிதங்கள் கூடினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் அச்சம் தருகின்றன. இதுவரை, பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகிறது.அதன் ஆளுமை, சந்தையையும் வழி நடத்தும் தன்மை கொண்டது.
இந்த சூழலில், ‘சந்தையில், அமெரிக்க வட்டி விகிதங்கள் தானாகவே உயர்ந்து விடும்’ என்ற பரவலான அச்சம் நிலவுகிறது.இதன் அறிகுறிகளே, உலகச் சந்தை கவலைகளுக்கான மூலக் காரணம்.அமெரிக்க அரசின் கடன் பத்திரமான, 10 ஆண்டு கால கருவூல பத்திரங்களில் ஈட்டக்கூடிய வட்டி விகிதம், 3 சதவீதம் என்பதை கடந்தவுடன், இந்த அச்சம் அதிகரித்தது.
மேலும் வட்டி விகிதங்கள் கூடினால், அது வளர்ச்சியை ஸ்தம்பிக்க செய்யும் என, பொருளாதார கருத்தொற்றுமையும் நிலவுகிறது.வட்டி, 3.2 சதவீதம் நோக்கி நகர, வட்டி விகிதம் இன்னும் அதிகமாகி விடுமோ என்றும், அந்த நிகழ்வு நடக்க வெகுநாள் ஆகாது என்றும், பலர் நினைக்கத் துவங்கினர்.இந்த அச்சம், பங்குச் சந்தையின் வயிற்றில் புளியை கரைத்தது.
உலகச் சந்தையில் இது உடனடியாக எதிரொலித்தது. பங்குச் சந்தையிலும், கடன் சந்தையிலும் இந்த கவலை, ஒரே சமயத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை.பெரிதும் உதவும்அமெரிக்க வட்டி விகிதம் கட்டுக்கோப்பிழந்து உயர்ந்தால், அதுவே உலக சந்தைகளில் பெரும் சரிவை உண்டாக்கும் என, முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை முகாந்திரம் உடையது.
அமெரிக்க அரசு, தன்னிச்சையாக கட்டுக்கோப்பான முறையில் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கும், அதுவே சந்தை சார்ந்த நகர்வாக, கட்டுக்கோப்பின்றி உயர்வதற்கும், பெரும் வித்தியாசம் இருக்கிறது என்பதை, சந்தை தெளிவாக உணர்கிறது.இந்த அச்ச உணர்வு, தொடர்ந்து சந்தையில்பிரதிபலிக்குமென்று, நாம் தெளிவாக புரிந்து வைத்தால், அது, நம் வருங்காலத்தை எதிர்கொள்வதற்கு பெரிதும் உதவும்.
தொழில் ஷியாம் சேகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|