பதிவு செய்த நாள்
16 அக்2018
23:47
புதுடில்லி : மத்திய அரசு பணியாளர்களுக்கான, பொது சேம நல நிதிக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
மத்திய அரசு பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் ராணுவத்தினருக்கான பொது சேம நலநிதிக்கு, ஜூலை – செப்., வரையிலான காலாண்டிற்கு, 7.6 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. இந்த வட்டி விகிதம், 0.4 சதவீதம் உயர்த்தப்பட்டு, 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம், அக்.,1 முதல், டிச., 31 வரை அமலில் இருக்கும் என, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
வங்கி டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளதை அடுத்து, சிறுசேமிப்பு, தேசிய சேமிப்பு பத்திரங்கள், பொது சேமநல நிதி உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதத்தை, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. கடந்த மாதம், இது குறித்த அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|