பொது சேம நல நிதி வட்டி 8 சதவீதமாக உயர்வுபொது சேம நல நிதி வட்டி 8 சதவீதமாக உயர்வு ... ‘ரேமண்ட்’  நிறுவனரின் பரிதாப நிலை ‘ரேமண்ட்’ நிறுவனரின் பரிதாப நிலை ...
‘விசா, மாஸ்டர் கார்டு’ நிறுவனங்களுக்கு அபராதம்? முடிந்தது ரிசர்வ் வங்கி, ‘கெடு’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2018
23:48

புதுடில்லி : மின்­னணு பணப் பரி­வர்த்­தனை தக­வல்­களை உள்­நாட்­டில் சேமித்து வைக்­காத அன்­னிய நிறு­வ­னங்­க­ளுக்கு, ரிசர்வ் வங்கி அப­ரா­தம் விதிக்­கும் என, தெரி­கிறது.

இந்­தி­யா­வில் செயல்­படும் அன்­னிய நிறு­வ­னங்­கள், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை தொடர்­பான தக­வல்­களை, வெளி­நா­டு­களில் சேமித்து வைக்­கின்­றன.அத­னால், புல­னாய்வு அமைப்­பு­க­ளுக்கு, சட்ட விரோத பணப் பரி­மாற்­றம், கறுப்பு பண புழக்­கம் போன்­ற­வற்றை கண்­கா­ணிப்­பது சிர­ம­மாக உள்­ளது. உள்­நாட்­டில் தக­வல்­களை சேமிப்­ப­தால், தக­வல் திருட்டு, கணினி சார்ந்த நிதி மோச­டி­கள் குறித்த புல­னாய்வை சுல­ப­மாக மேற்­கொள்­ள­லாம்.

இதை­யொட்டி, மின்­னணு பணப் பரி­வர்த்­தனை சேவையை வழங்­கும் அன்­னிய நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில், ‘சர்­வர்’ அமைத்து பணப் பரி­வர்த்­தனை தக­வல்­களை சேமிக்க வேண்­டும் என, ரிசர்வ் வங்கி, ஏப்­ர­லில் உத்­த­ர­விட்­டது. இதற்­கான கெடு, நேற்று முன்­தி­னம் முடி­வ­டைந்­தது.

இது குறித்து, வங்கி அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: இந்­தி­யா­வில், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை சேவை­யில், 78 நிறு­வ­னங்­கள் ஈடு­பட்­டுள்­ளன. அவற்­றில், மாஸ்­டர் கார்டு, விசா, அமெ­ரிக்­கன் எக்ஸ்­பி­ரஸ், பே பால் உள்­ளிட்ட, 15 நிறு­வ­னங்­கள் மட்­டும், இன்­னும், ‘சர்­வர்’ அமைத்து, தக­வல்­களை இங்கு சேமிக்­கா­மல் உள்­ளன. எனி­னும், இத்­திட்­டத்­திற்­கான முன்­னேற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­வ­தாக, அவை ரிசர்வ் வங்­கி­யி­டம் தெரி­வித்­து உள்­ளன.

இந்­நி­று­வ­னங்­க­ளின் பணப் பரி­வர்த்­தனை சேவையை முடக்­கி­னால், வாடிக்­கை­யா­ளர்­கள் பாதிக்­கப்­ப­டு­வர். ஆகவே, ரிசர்வ் வங்கி அன்­னிய நிறு­வ­னங்­க­ளின் சேவையை முடக்­கா­மல், அப­ரா­தம் மட்­டும் விதிக்­கும் என, தெரி­கிறது. இம்­மாத இறு­திக்­குள் அன்­னிய நிறு­வ­னங்­கள், இங்கு, ‘சர்­வர்’ அமைத்து விடும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)