பதிவு செய்த நாள்
17 அக்2018
23:19
மும்பை : அக். 18–ஜவுளி தயாரிப்பில் ஈடுபட்டு வரும், ‘ரேமண்ட்’ நிறுவனத்தின், நிறுவனர், விஜய்பத் சிங்கானியாவிடமிருந்து, கவுரவ தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், 1925ல், சர்வதேச ரேமண்ட் ஜவுளி பிராண்டு அறிமுகமானது. சுதந்திரத்திற்கு பின், விஜய்பத் சிங்கானியா வசம் வந்த ரேமண்ட் பிராண்டு, குறுகிய காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டது.ஜவுளி, ஆயத்த ஆடை, அழகு சாதனங்கள், பொறியியல் பொருட்கள் என, ரேமண்ட் குழுமத்தின் வர்த்தகம் ஆல மரம் போல வியாபித்து உள்ளது.
இந்நிலையில், விஜய்பத் சிங்கானியாவுக்கும், அவர் மகனும், ரேமண்ட் தலைமை செயல் அதிகாரியுமான, கவுதம் சிங்கானியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதையடுத்து, விஜய்பத் சிங்கானியாவின் பொறுப்புகள் பறிக்கப்பட்டு, ரேமண்ட், கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், அவர், நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து கேட்டதற்கு, ‘கவுரவ தலைவர்’ என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் என, நிறுவனம் கூறியது.
இதற்கு, சிங்கானியா அனுப்பிய கடிதத்தில், மோசமான வார்த்தைகள் இருந்ததாக கூறி, அவரின் கவுரவ தலைவர் பதவியும் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், ‘பத்மபூஷண்’ விருது, உலகில் அதிக உயரத்தில் வெப்ப பலுானில் பறந்த சாதனையாளர், மும்பை நகர, ‘ஷெரீப்’ ஆக பதவி வகித்தவர் என, பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர் சிங்கானியா.
தற்போது, தான் உருவாக்கிய நிறுவனத்தின் கவுரவ தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். பத்மபூஷண் விருது உட்பட, தன் பொருட்கள் பலவற்றை மகன் பறித்துக் கொண்டதாக புலம்பி வருகிறார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|