‘ரேமண்ட்’  நிறுவனரின் பரிதாப நிலை‘ரேமண்ட்’ நிறுவனரின் பரிதாப நிலை ... பங்கு வெளியீட்டுக்கு வரும் பாரத் ஓட்டல்ஸ், ஸ்பந்தனா பங்கு வெளியீட்டுக்கு வரும் பாரத் ஓட்டல்ஸ், ஸ்பந்தனா ...
மொபைல் வாலட் பரிவர்த்தனை புதிய விதிமுறைகள் வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2018
23:22

மும்பை : அக். 18–ரிசர்வ் வங்கி, 'பேடிஎம், மொபிக்விக்' போன்ற மொபைல் வாலட் சேவை தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

தற்போது, ஒரு மொபைல் வாலட் நிறுவனத்தின் வாடிக்கையாளர், மற்றொரு மொபைல் வாலட் நிறுவனத்தின் வாடிக்கையாளருக்கு பணம் அனுப்பவோ, பெறவோ அனுமதிஇல்லை. கே.ஒய்.சி.,இந்த கட்டுப்பாட்டை, ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது. மின்னணு பணப் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நோக்குடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னதாக பணம் செலுத்தி, மொபைல் வாலட்டில் சேமிக்கும் வசதியை வழங்கும் 'பேடிஎம், மொபிக்விக்' போன்ற நிறுவனங்களின் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்.

இந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் வாலட்டில் உள்ள தொகையை, வேறு மொபைல் வாலட் வாடிக்கையாளருக்கு அனுப்பலாம். இதற்கு, மொபைல் வாலட் நிறுவனங்கள், ‘கே.ஒய்.சி.,’ எனப்படும், வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் நடைமுறையை, கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி மேலும், ஒரு மொபைல் வாலட்டில் இருந்து, வேறொரு மொபைல் வாலட்டிற்கோ அல்லது வங்கி கணக்கிற்கோ பணம் அனுப்புவதானால், பொதுத் துறையைச் சேர்ந்த, என்.பி.சி.ஐ., நிறுவனத்தின், ஒருங்கிணைந்த பணப்பட்டுவாடா வழியை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உணவு, அன்பளிப்பு போன்றவற்றை பெறுவதற்காக, பல நிறுவனங்கள், பணமதிப்பு அட்டைகளை வழங்குகின்றன. இத்தகைய நிறுவனங்கள், ‘டெபிட், கிரெடிட்’ கார்டு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பணப் பணப்பட்டுவாடா வசதியை பயன்படுத்தலாம்.

வாலட்டில் முன்கூட்டியே தொகையை பற்று வைத்து, அதில் இருந்து செலவழிக்கும் வசதியை வழங்கும் நிறுவனங்கள், பிற நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பணப் பரிவர்த்தனை வசதியை வழங்க, இயக்குனர் குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் எனவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பண மதிப்பு அட்டை வழங்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட, ‘கிரெடிட், டெபிட்’ கார்டு நிறுவனங்களின், உறுப்பினராக இணையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)