பதிவு செய்த நாள்
18 அக்2018
04:14
புதுடில்லி : ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனமான அமேசான், கிஷோர் பியானி தலைமையில் செயல்பட்டு வரும், ‘பியூச்சர் ரீட்டெய்ல்’ நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
‘அமேசான்’ நிறுவனம், இந்தியாவில் வலுவாக காலுான்ற தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அண்மையில் இந்த நிறுவனம், ‘ஷாப்பர்ஸ் ஸ்டாப் மற்றும் மோர்’ ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கியது. தற்போது, பியூச்சர் ரீட்டெய்ல் நிறுவனத்தின் குறிப்பிடத்தகுந்த அளவிலான பங்குகளை கைப்பற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்காக, 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இது குறித்து, கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே பேச்சு நடந்து வரும் சூழலில், அடுத்த மூன்று முதல், நான்கு வாரங்களில் பங்குகள் கைமாறக்கூடும் என தெரிகிறது. இந்தியாவில், ‘வால்மார்ட்’ நிறுவனத்துக்கு போட்டியாக, இத்தகைய முயற்சிகளை, அமேசான் எடுத்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அண்மையில், வால்மார்ட் நிறுவனம், ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தின், 77 சதவீத பங்குகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|