பதிவு செய்த நாள்
18 அக்2018
23:27
மும்பை : நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, நரேஷ் கோயலின், ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தை வாங்க, டாடா குழுமம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே, இரு தரப்பிலும் பேச்சு நடைபெற்றது. அதில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், 26 சதவீத பங்கை வாங்கி, நிர்வாகத்தை கைப்பற்ற விரும்புவதாக டாடா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நரேஷ் கோயல் ஒப்புக் கொள்ளவில்லை. இவர், தன் மனைவியுடன் இணைந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், 51 சதவீத பங்கை வைத்து உள்ளார். எதியாட் ஏர்வேஸ் நிறுவனம், 24 சதவீத பங்கை வைத்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் ஜெட் – டாடா தரப்பினர் இடையே பேச்சு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழுமம், தற்போது ஏர் ஏஷியா இந்தியா மற்றும் விஸ்டாரா நிறுவனங்கள் மூலம் விமான சேவையை மேற்கொண்டு வருகிறது. நிதி நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தையும், டாடா குழுமம் வாங்க முயன்றது. ஆனால், மத்திய அரசு பின்வாங்கியதால், அத்திட்டம் நிறைவேறவில்லை.
தற்போது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வளைத்துப் போடும் முயற்சியில் இறங்கியுள்ளது. டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, 90களின் இறுதியில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூலம், விமான சேவையில் கால் பதிக்க முனைந்தபோது, நரேஷ் கோயல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|