பதிவு செய்த நாள்
18 அக்2018
23:28
சென்னை : சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, கார் வாங்குவதற்கான, 100 சதவீதம் கடன் தொகையை, முன் அனுமதியாக வழங்கும் புதிய திட்டத்தை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, முன் அனுமதி கார் கடன் வழங்கும் வசதியை, சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, சாலையில் காரை இயக்கும் வரை ஆகக் கூடிய செலவுகளை உள்ளடக்கிய, 100 சதவீத கார் கடனுக்கு முன் அனுமதி வழங்கப்படுகிறது.
கார் கடன், நான்கு மணி நேரத்தில், 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. விழா காலங்களில், வாடிக்கையாளர்கள் கார் வாங்க உதவியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசம், ஏழு ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|