பதிவு செய்த நாள்
18 அக்2018
23:30
புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனம், 500 கோடி ரூபாய் நிதியை திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதுடன், தற்போது செயல்பாட்டு மூலதனம் மற்றும் வட்டி கட்டுவதற்கே மிகவும் சிரமப்படுகிறது. இதையடுத்து, 500 கோடி ரூபாய் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த, 500 கோடி ரூபாய் நிதியை, வங்கிகளிடமிருந்து பெற உள்ளது.
மத்திய அரசு உத்தரவாதத்தின் அடிப்படையில், இந்த நிதியை திரட்டுகிறது, ஏர் இந்தியா நிறுவனம். அடுத்த வாரத்துக்குள்ளாக இந்த நிதி திரட்டும் பணி நிறைவு பெற்றுவிடும் என, உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கடனில் சிக்கியுள்ள நிறுவனம், தற்போது திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைக்கான வட்டியை கட்டுவதற்கே மிகவும் சிரமப்படுகிறது. எனவே, 500 கோடி ரூபாய் நிதியை வங்கிகளிடமிருந்து பெற இருக்கிறோம். இதற்கான உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்குகிறது. இந்த கடன் ஓராண்டுக்கு மட்டும் தான். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|