பதிவு செய்த நாள்
18 அக்2018
23:31
புதுடில்லி : முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் நிகர லாபம், ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், 17.4 சதவீதம் அதிகரித்து, 9,516 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த ஆண்டு, இதே காலாண்டில், 8,109 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், வருவாய், 54.5 சதவீதம் உயர்ந்து, 1,56,291 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதன் சில்லரை விற்பனை பிரிவின் லாபம், 213 சதவீதம் உயர்ந்து, 1,392 கோடியாகவும், வருவாய் இரு மடங்கு அதிகரித்து, 32,436 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்தின் நிகர லாபம், முதல் காலாண்டை விட, 11.3 சதவீதம் உயர்ந்து, 681 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்நிறுவனம், 271 கோடி ரூபாய் இழப்பை கண்டிருந்தது.மதிப்பீட்டு காலாண்டில், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை, 25.23 கோடியாக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின், பெட்ரோலிய ரசாயன பொருட்கள் பிரிவின் லாபம், 63.7 சதவீதம் உயர்ந்து, 8,120 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவு வருவாய், 19.6 சதவீதம் குறைந்து, 5,322 கோடி ரூபாயாக சரிந்துள்ளது; இழப்பு, 480 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ், 5,230 கோடி ரூபாய் முதலீட்டில், கம்பிவட இணைய சேவையில் ஈடுபட்டுள்ள, ‘ஹாத்வே கேபிள், டென் நெட்ஒர்க்ஸ், டாடாகாம்’ நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பங்குகளை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
25 கோடி சந்தாதாரர்கள் :
ரிலையன்ஸ் சில்லரை விற்பனை பிரிவு வருவாய், இரு மடங்கு உயர்ந்துள்ளது. ஆர்ஜியோ வருவாய், 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. ஆர்ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை, 25 கோடியை தாண்டி விட்டது. உலகில், மொபைல் போன் தரவுகள் பரிவர்த்தனையில், ஆர்ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
-முகேஷ் அம்பானி
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|