பதிவு செய்த நாள்
20 அக்2018
00:43
புதுடில்லி: ‘நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், விரிவான தங்க கொள்கையை, விரைவில், மத்திய அரசு தாக்கல் செய்யும்’ என, தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையை மேம்படுத்த, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, உலோகத் தொழில் துறை, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், விரிவான தங்க கொள்கையை, விரைவில் தாக்கல் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதன் மூலம், உள்நாட்டு நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் ஏற்றுமதியை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.பிப்ரவரி மாதத்தில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘புதிய விரிவான தங்க கொள்கை அறிமுகப்படுத்தப்படும்’ என, கூறியிருந்தார்.மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘தங்கம் மீதான இறக்குமதி வரியை, 10 சதவீதத்தில் இருந்து குறைக்க வேண்டும்’ எனவும், ‘அதன் மீதான, 3 சதவீத, ஜி.எஸ்.டி.,யையும் குறைக்க வேண்டும்’ எனவும், அரசுக்கு பரிந்துரை செய்தது.மேலும், தங்க கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஊக்கப்படுத்தவும், ‘நிடி ஆயோக்’ பரிந்துரை செய்தது.நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க, சிறப்பு திட்டத்தின் கீழ், ஊக்கத் தொகைகளை வழங்கும்படி, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|