பதிவு செய்த நாள்
24 அக்2018
23:08
ஈரோடு : டீசல், போக்குவரத்து செலவு, மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களாலும், ஜி.எஸ்.டி., 10 சதவீதம் குறைக்கப்பட்டதாலும், பட்டாசு விலை குறைந்து உள்ளது.
‘தீபாவளி அன்று இரவு, 8:00 முதல், 10:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.‘காற்று மாசு, அதிக சத்தம் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகளை மட்டும் வெடிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பட்டாசு விற்பனை குறித்து, ஈரோடு மொத்த பட்டாசு விற்பனையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, வீரண்ணா, தியானேஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:கடந்த ஆண்டுகளில் வறட்சியால், பட்டாசு விற்பனை குறைந்தது; அதிகமாக இருப்பானது. தவிர, கடந்தாண்டு, சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., 28 சதவீதம் விதிக்கப்பட்டது.தற்போது, அவ்வரி விதிப்பு, 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், டீசல் விலை உயர்வு, போக்குவரத்து செலவு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என, பட்டாசு விலை, 5 சதவீதம் உயர்ந்துள்ளது. இருப்பினும், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 5 சதவீதத்துக்கு மேல் விலை குறைந்தே காணப்படுகிறது.
இந்தாண்டு புதிதாக, 1,200 ரூபாய் விலையில், 80 ஷாட் – நைட் பேஸ் என்ற இரவில் வெடிக்கும் வாண வெடி, 100 ஷாட் – 1,350 ரூபாய்க்கும்; 240 ஷாட் – 4,200 ரூபாய்க்கும்; ஆஸ்ட்ரா மல்டி கலர் ஷாட், கேசினோ –130 ரூபாய்க்கும்; சூப்பர் சிக்ஸ் என்ற வெடிகள், 750 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
தவிர, மியூசிக் மெலோடி – 20, லால்ஹரா, பவ்ஸ் ஆரோ, மேஸ்டி கலர் ஷாட், கிருஷ்ண ஜால், ஜாய் – 60 என, பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கிப்ட் பாக்ஸ்கள், 290 முதல், 1,030 ரூபாய் வரையிலான விலையில் உள்ளன. ஒட்டு மொத்தமாக, மத்தாப்பு, தரைச்சக்கரம், வெடிக்கும் பட்டாசுகள், இரவில் வெடிக்கும் அழகு பட்டாசுகள் விலை, 5 முதல், 10 சதவீதம் குறைந்துள்ளது.கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டில், கடந்த ஒரு வாரமாக பட்டாசு மொத்த மற்றும் சில்லரை விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|