பதிவு செய்த நாள்
24 அக்2018
23:10
மும்பை : டாடா குழும முன்னாள் தலைவர், சைரஸ் மிஸ்திரி, புதிய முதலீட்டு நிறுவனத்தை துவக்கியுள்ளார்.
டாடா குழும தலைவராக, 2012ல் பொறுப்பேற்ற சைரஸ் மிஸ்திரி, கவுரவ தலைவர், ரத்தன் டாடா உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, 2016 அக்., 24ல், பதவி நீக்கம் செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பின், தான் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதே நாளில், புதிய நிறுவனத்தை துவக்கியுள்ளதாக, சைரஸ் மிஸ்திரி அறிவித்துள்ளார்.
‘மிஸ்திரி வெஞ்சர்ஸ்’ என்ற இந்நிறுவனம், வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை துவக்க, நிதியுதவி அளிக்கும். புதிய வர்த்தக உத்திகளை உருவாக்கவும், செயல்படுத்தவும், முதலீட்டு ஆதரவை வழங்கும். இந்நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக, ஆஷிஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், ‘பாஸ்டன் கன்சல்டிங்’ குழுமத்தின், சர்வதேச திட்டப் பிரிவு தலைவராக பணியாற்றியவர்.‘‘புதிய நிறுவனம், லாபம் ஈட்டுவதுடன், சமூக மேம்பாட்டிற்கான குறிக்கோளுடன் செயல்படும்,’’ என, சைரஸ் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.இவருடன், சகோதரர்சபூர் மிஸ்திரியும், புதிய நிறுவனத்தில், சரிபாதி முதலீடு செய்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|