புதிய நிறுவனம் துவக்கினார் சைரஸ் மிஸ்திரி புதிய நிறுவனம் துவக்கினார் சைரஸ் மிஸ்திரி ... டி.வி.எஸ்., நிறுவன இயக்குனராக கே.என். ராதாகிருஷ்ணன் நியமனம் டி.வி.எஸ்., நிறுவன இயக்குனராக கே.என். ராதாகிருஷ்ணன் நியமனம் ...
மெய்நிகர் கரன்சி ஏ.டி.எம்., துணை நிறுவனர் கைது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2018
23:11

பெங்களூரு : பெங்களூரில், மெய்நிகர் கரன்சிக்கான, ஏ.டி.எம்.,மை திறந்த, ‘யுனோகாய்ன்’ நிறுவனத்தின் துணை நிறுவனர், ஹரிஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, ஏராளமான மொபைல் போன்கள், லேப் டாப்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் 1.79 லட்சம் ரூபாய் ரொக்கத்தை, சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரைச் சேர்ந்த, யுனோகாய்ன் நிறுவனம், வலைதளங்களில் புழங்கும், ‘பிட்காய்ன், எதிரியம்’ உள்ளிட்ட மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது.இத்தகைய நிறுவனங்களுக்கு வங்கிச் சேவை வழங்க, ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்நிலையில், யுனோகாய்ன், கடந்த வாரம், பெங்களூரு, கெம்ப்போர்ட் மாலில், இந்தியாவின் முதல் மெய்நிகர் கரன்சி, ஏ.டி.எம்.,மை திறந்தது.

இதில், பணம் டிபாசிட் செய்து, மெய்நிகர்கரன்சியை வாங்கலாம்;விற்பனை செய்யும் மெய்நிகர் கரன்சிக்கான பணத்தை, வங்கி உதவியின்றி பெறலாம் என, யுனோகாய்ன் தெரிவித்தது.இந்நிலையில், மாநில அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் அனுமதியின்றி, ஏ.டி.எம்., அமைத்த குற்றச்சாட்டில், ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, மெய்நிகர் கரன்சி, ஏ.டி.எம்., இயந்திரத்தை, யுனோகாய்ன் அகற்றியுள்ளது. இதற்கு, முதலீட்டாளர்களின் ஆதரவு கிடைக்காததே காரணம் என ஒப்புக் கொண்ட யுனோகாய்ன், விரைவில் மீண்டும் இயந்திரம் நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)