பதிவு செய்த நாள்
24 அக்2018
23:11
பெங்களூரு : பெங்களூரில், மெய்நிகர் கரன்சிக்கான, ஏ.டி.எம்.,மை திறந்த, ‘யுனோகாய்ன்’ நிறுவனத்தின் துணை நிறுவனர், ஹரிஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, ஏராளமான மொபைல் போன்கள், லேப் டாப்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் 1.79 லட்சம் ரூபாய் ரொக்கத்தை, சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த, யுனோகாய்ன் நிறுவனம், வலைதளங்களில் புழங்கும், ‘பிட்காய்ன், எதிரியம்’ உள்ளிட்ட மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது.இத்தகைய நிறுவனங்களுக்கு வங்கிச் சேவை வழங்க, ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்நிலையில், யுனோகாய்ன், கடந்த வாரம், பெங்களூரு, கெம்ப்போர்ட் மாலில், இந்தியாவின் முதல் மெய்நிகர் கரன்சி, ஏ.டி.எம்.,மை திறந்தது.
இதில், பணம் டிபாசிட் செய்து, மெய்நிகர்கரன்சியை வாங்கலாம்;விற்பனை செய்யும் மெய்நிகர் கரன்சிக்கான பணத்தை, வங்கி உதவியின்றி பெறலாம் என, யுனோகாய்ன் தெரிவித்தது.இந்நிலையில், மாநில அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் அனுமதியின்றி, ஏ.டி.எம்., அமைத்த குற்றச்சாட்டில், ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, மெய்நிகர் கரன்சி, ஏ.டி.எம்., இயந்திரத்தை, யுனோகாய்ன் அகற்றியுள்ளது. இதற்கு, முதலீட்டாளர்களின் ஆதரவு கிடைக்காததே காரணம் என ஒப்புக் கொண்ட யுனோகாய்ன், விரைவில் மீண்டும் இயந்திரம் நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|