பதிவு செய்த நாள்
24 அக்2018
23:14
புதுடில்லி : பண்டிகை காலத்தை முன்னிட்டு, தங்கம் விலை நேற்று, ஓராண்டு காணாத உயர்வை எட்டியது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில், 10 கிராம், 24 காரட் சுத்த தங்கம், முன்தினத்தை விட, 150 ரூபாய் உயர்ந்து, 32 ஆயிரத்து, 500 ரூபாயை எட்டியது.ஓராண்டுக்கு பின், இந்த அளவிற்கு, சுத்த தங்கம் விலை உயர்ந்துள்ளது. மே, 15ல், தங்கம் விலை, 32 ஆயிரத்து, 450 ரூபாய் என்ற அளவில் இருந்தது.
தீபாவளி, திருமண காலம் போன்றவற்றால், நகை வியாபாரிகள் அதிக அளவில் தங்கம் வாங்கி வருகின்றனர். இதனால், தங்கத்திற்கான தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருவதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.சர்வதேச சந்தையிலும், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சிங்கப்பூரில் நேற்று, 1 அவுன்ஸ் தங்கம் விலை, 0.11 சதவீதம் உயர்ந்து, 1,232.20 டாலராக அதிகரித்துள்ளது. இது, ஜூலை, 17க்கு பின், நேற்று முன்தினம், 1,239.68 டாலரை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை, 0.17 சதவீதம் உயர்ந்து, 14.83 டாலராக அதிகரித்துள்ளது.
மும்பையில், 1 சவரன் ஆபரண தங்கம் விலை, 100 ரூபாய் உயர்ந்து, 24 ஆயிரத்து, 800 ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், வெள்ளி விலை குறைந்துள்ளது. நேற்று, 1 கிலோ வெள்ளி, 20 ரூபாய் குறைந்து, 39 ஆயிரத்து, 730 ரூபாயாக சரிவடைந்தது. தொழில் துறைக்கான வெள்ளியின் தேவை குறைந்துள்ளதால், அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|